வெற்றி என்பது விழாமல் இருப்பதல்ல.. விழுந்த ஒவ்வொரு முறையும் மீண்டும் கம்பீரமாய் எழுந்து நிற்பது..!

Sunday, January 2, 2011

எரிகிற வீட்டில்..!!

பெண்மையை வர்ணிக்காத
ஒரு
கவிஞன்..

புரிகின்ற வரிகளுடன்
ஒரு
புதினம்..

ஆபாசம் கலவா
ஒரு
திரைப்படம்..

அர்த்தப் பேச்சுடன்
ஒரு
அரட்டை..

ஊழல் செய்யாத
ஒரு
உலகம்..

காமம் கலவாத
ஒரு
காதல்..

கடமைத் தவறாத
ஒரு
அரசு அதிகாரி..

கண்ணியமோடு பேசும்
ஒரு
அரசியல்வாதி..

அறிவு தாகம் கொண்ட
ஒரு
மாணவன்..

அண்டை நிலத்துக்கு ஆசைப்படா
ஒரு
அன்னியன்..

இவை
கனவுகள்தாம் என்றாலும்
ஒரு
கவிதையாவது கிடைத்ததே..!!
(09-04-2001 அன்று எனது டைரியை ஆக்கிரமித்திருக்கும் எனது பழைய கவிதை இது..)